உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ஷாகித் ஹுசைன் நூர் – பானு தம்பதி. ஷாகித் ஹுசைன் டெய்லர் கடை வைத்துள்ளார் சம்பவத்தன்று ஹுசைன் பானுவிடம் சிக்கன் வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் பானு பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சிறிது நேரத்தில் பானு சென்று சிக்கன் வாங்கி வந்துள்ளார்.

அப்போதும் தம்பதி இடையே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் ஷாகித் ஹுசைன் கத்திரிக்கோலால் நூர் பானுவின் கழுத்தில் குத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தம்பதியின் குழந்தைகள் கண்ணெதிரே தான் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஷாகித் ஹுசைனை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.