DEEPFAKE வீடியோக்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது போலியான செய்திகள் மற்றும் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவதற்கு எதிராக பயனர்களை எச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் இதற்கு ஏற்றது போல விதிகளை மாற்றுமாறும் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.