ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் மணிநகர் பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று ஆனந்தராஜ் தனது மனைவி அமுதா இரண்டு பேர குழந்தைகளுடன் சொகுசு காரில் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார்.

இந்நிலையில் அரசிராமணி செட்டிப்பட்டி வழியாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆனந்தராஜ் உள்பட நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.