தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்புலியங்குடி அருந்ததியர் தெருவில் மகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புளியங்குடி மனோ கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மணிகண்டனும் அவளது நண்பர் அருண்குமாரும்(19) குற்றாலத்தில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இந்நிலையில் சொக்கம்பட்டி காவல் நிலையத்தை அடுத்த அபாய அளவில் வைத்து எதிரே வந்த சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன், அருண்குமார் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமாரும், மணிகண்டனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.