சாலையில் ஓடும் வகையிலான சோபாவை தயார் செய்த இரண்டு இளைஞர்களை பாராட்டி பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இளைஞர்களின் திறமையை பாராட்டியதோடு இந்தியாவில் இந்த சோபாவை ஆர்டிஓ அலுவலகத்திற்கு பதிவு செய்ய கொண்டு சென்றால் அதிகாரியின் முகம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க தனக்கு ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் வெளியிட்ட காணொளியில் இளைஞர்கள் இருவர் ஆன்லைனில் சாதனங்களை வாங்கி சாலையில் செல்லும் வகையிலான சோபாவை தயார் செய்வது பதிவாகியிருந்தது.