பொங்கல் பண்டிகையையொட்டி, சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஜன.18 முதல் 31ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலாக டோக்கன் வழங்கவும், ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.