பைசன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த நேரத்தில், “இயக்குனர் மாரி செல்வராஜ் படங்கள் சாதி சார்ந்த கதைகளை மையமாகக் கொண்டு உருவாகின்றன; இந்த காலகட்டத்தில் இப்படியான படங்கள் தேவையா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு துருவ் விக்ரம் மிக நிதானமாகவும் தார்மீகமாகவும் பதிலளித்து, “ஒரு இயக்குனர் எந்த வகையான படத்தை எடுக்க வேண்டும், எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு யாராலும் விதிக்க முடியாது. அந்த சுதந்திரம் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்” என கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: “மாரி செல்வராஜ் படங்களில் காட்டப்படும் ஜாதி ரீதியான வன்முறைகள், துன்புறுத்தல்கள், சமூக அநீதிகள் — இவை வெறும் கற்பனைகள் அல்ல. இன்றளவும் இந்தியாவின் பல பகுதிகளில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், ஜாதி ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
#Dhruv about Casteism films in Tamil :
“With regards to MariSelvaraj sir, He makes cinema because of what he has been through..🤝 It’s important to address this when there’s still a social climate like this india & mostly in thesouthern parts of TN..✌️ pic.twitter.com/KmIk6XFZZY
— Laxmi Kanth (@iammoviebuff007) October 21, 2025
“>
இந்த உண்மைகளை மக்கள் அறிந்து மாற்றம் பெறுவதற்காக இப்படங்கள் அவசியம். இவை மக்களுக்கு கல்வியளிக்கும், சிந்திக்க வைக்கும் வகையில் பயன்படும்” என துருவ் விக்ரம் தெரிவித்தார். அவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று, “சிந்தனையுடன் பேசும் இளைஞர் நடிகர்” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
