கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு செல்வராஜ் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வராஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் செல்வராஜுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.