சீனாவில் சென் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்யப்பட்டிருந்த மூன்று சவ பெட்டியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் சவப்பெட்டிக்குள் இருந்த எலும் ஓடுகளை அகற்றிவிட்டு மண்டை ஓட்டுக்கு முத்தம் கொடுத்து இருக்கின்றார் சென். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகவே கடந்த வருடம் நடந்த இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்கவே சென் மற்றும் அவரும் நண்பர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்பட்டு சென்னைக்கு 9 மாத நிபந்தனையுடன் கூடிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் அடக்கம் செய்ய பயன்படுத்தும் கோழி குகை பகுதி 2015 ஆம் ஆண்டு கலாச்சார நினைவுச் சின்ன பாதுகாப்பு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.