போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமைதியை விரும்பும் தங்களின் நாட்டின் மீது போரிட்டாலோ தாக்குதல் நடத்தினாலோ தாங்கள் விடமாட்டோம் என்றும் தங்கள் தேசத்தில் ஒவ்வொரு அங்குலம் நிலத்தையும் பாதுகாக்க ஆயுதப்படைகள் தயாராக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அனைவரிடமும் அமைதியை விரும்பும் பாகிஸ்தானியர்கள் நமது நாட்டை பாதுகாக்கும் கடமையிலிருந்து தவற விடக்கூடாது என அந்நாட்டின் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.