பொதுவாகவே குளிர்காலத்தில் பலருக்கும் சளி மற்றும் இருமல் பிரச்சனை இருக்கும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவதிப்படுகின்றனர். இதனை விரட்ட வீட்டிலேயே கசாயம் செய்து குடிக்கலாம். இதற்கு இஞ்சி ஒரு துண்டு, துளசி அரை கைப்பிடி மற்றும் தேன் 3 ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியையும் துளசியையும் நன்கு இடித்து சாரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு சாரையும் ஒன்றாக கலந்து அதில் தேனை கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் கசாயம் ரெடி. இதனை தினமும் இரண்டு வேலை குடித்து வந்தால் சளி இருமல் பிரச்சனை தீரும். ஆனால் குழந்தைகளுக்கு இதனை குறிப்பிட்ட அளவு மட்டுமே கொடுப்பது நல்லது.