சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்த புகாரில் வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.