சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் 9000 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் வசிக்கும் ராஜ்குமாருக்கு, TMB வங்கியில் இருந்து 9000 கோடி வரவு வைக்கப்பட்டதாக SMS வந்துள்ளது. 15 மட்டுமே இருப்பு இருந்த கணக்கில் வந்த தொகையை கண்டு அதிர்ந்த அவர், நண்பருக்கு 1000 அனுப்பி உறுதி செய்துள்ளார். இதனிடையே, சுதாரித்துகொண்ட வங்கி உடனே அவரது கணக்கில் இருந்த பணத்தை திரும்பபெற்றது.