இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அதிமுக பெயர், சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு வாதத்தின் போது, அதிமுகவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ், தங்களுக்கு இணையாக செயல்படுகிறார் என தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது.