ஏற்காடு அடிவாரம் சாலை இந்திரா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்னை காரணமாக கணவன், மனைவி, குழந்தைகள் என மொத்த குடும்பமும் விஷம் அருந்தி தற்கொலை செய்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 4 பேரின் உடலையும் கைப்பற்றி, கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.