தூத்துக்குடி முயப்பநாட்டில் அலுவலகத்திற்குள் புகுந்து லூர்து பிரான்சிஸ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததால், அரசு அலுவலகத்திற்குள்ளேயே ரவுடிகள் நுழைந்து பலமுறை கொடூரமாக வெட்டி ஒரு அதிகாரியை கொலை செய்கிறார்கள் என்றால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.