கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தன்னுடைய 5 வயது மகளுடன் ஸ்ரீபிரியா வசித்து வரும் நிலையில் அவர்களுடன் பெயிண்டராக வேலை பார்த்து வரும் ஸ்ரீ பிரியாவின் உடன் பிறந்த சகோதரர் மகேஷ் ராவ் (40) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகேஷ் ராவ் ஸ்ரீபிரியாவின் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பிறப்புறுப்பில் அதிக வலி ஏற்பட்டதால் சிறுமி வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். இதைப் பார்த்த ஸ்ரீபிரியா மகளிடம் விசாரிக்க நடந்த அனைத்தையும் சிறுமி கூறியுள்ளார். உடனே ஸ்ரீபிரியா மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய அண்ணன் மீது புகார் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ் ராவை கைது செய்துள்ளனர். மேலும் சொந்த தாய் மாமனே தங்கையின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.