சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இதற்கு நேற்று முதல் பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதான நினைவுச் சின்னங்களை இன்று கட்டணம் இல்லாமல் பார்வையிட இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கி அசத்தலான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. வழக்கமாக மாமல்லபுரத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.