மால்டா நாட்டு கொடியுடன் அரேபியன் கடல் பகுதியில் வந்த சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இதில் சரக்கு கப்பலில் இருந்த மாலுமி காயமடைந்த நிலையில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டதால் கடற்கொள்ளையர்கள் அவரை விடுவித்தனர். இதில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் முக்கிய பங்காற்றியுள்ளது.

விடுவிக்கப்பட்ட மாலுமியை மீட்ட இந்திய கடற்படை சிகிச்சைக்காக அவரை ஓமனுக்கு அனுப்பி வைத்தது. மேலும் கடத்தப்பட்ட கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அது தற்போது சோமாலியா கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.