சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 19 நாட்கள் போராடிய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தேர்தலில் எதிரொளிக்கும் என்பதால் போராடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யவில்லை, 19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.