தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேசமயம் திரை நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். அதன்படி விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் ராதிகா சரத்குமார் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, நீங்கள் பாஜகவில் இணைந்ததற்கு என்ன காரணம்?, ஏன் சேர்ந்தீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராதிகா, “ஏன் சேரக்கூடாதா?.. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் நான் பாஜகவில் இணைந்ததற்கு காரணம்” என கூறிஉள்ளார்.