தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனதால் தமிழ் சினிமாவின் பார்வை நயன்தாரா மீது விழுந்துள்ளது. இந்த நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க 13 கோடிக்கும் மேல் நயன்தாரா சம்பளம் கேட்டதாகவும் அதனை கொடுக்கப்பட குழுவும் தயாராக உள்ளதாகவும் இந்தி சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.