லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியானது. காலை 9 மணிக்கு மேல் லியோ வெளியிட அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், கிருஷ்ணகிரி சாந்தி திரையரங்கில் காலை 8.30 மணிக்கே திரையிடப்பட்டது. அதிகாலையில் இருந்து கூடிய ரசிகர்கள் கூட்டத்தை திரையரங்கு ஊழியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே லியோ படம் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “லியோ” திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் ஒருவர் திரையரங்கிற்குள் திருமணம் செய்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை விஜய் திரையரங்கில் விஜய்யின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் என்பவர் தனது காதலியுடன் முதல் காட்சியை பார்க்க வந்தார். அப்போது, திரை முன்பு விஜய் ரசிகர்களின் ஆசீர்வாதத்துடன் காதலியை திருமணம் செய்துக் கொண்டார்.