லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியானது. காலை 9 மணிக்கு மேல் லியோ வெளியிட அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், கிருஷ்ணகிரி சாந்தி திரையரங்கில் காலை 8.30 மணிக்கே திரையிடப்பட்டது. அதிகாலையில் இருந்து கூடிய ரசிகர்கள் கூட்டத்தை திரையரங்கு ஊழியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே லியோ படம் வெளியாகியுள்ளது

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால், ஆத்திரமடைந்த விஜய்யின் தீவிர ரசிகரான அன்பரசு, திரையரங்க சுவரேறி குதித்ததில் கால் உடைந்துள்ளது. கால் உடைந்ததையும் பொருட்படுத்தாமல், வெறித்தனமாக படம் பார்க்க தியேட்டருக்குள் சென்ற அவரை போலீசார் நிறுத்தி அறிவுரை கூறி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அய்யோ தளபதி படத்தை பார்க்க முடியவில்லையே என்று அவர் கதறி துடித்துள்ளார்.