லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியானது. காலை 9 மணிக்கு மேல் லியோ வெளியிட அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், கிருஷ்ணகிரி சாந்தி திரையரங்கில் காலை 8.30 மணிக்கே திரையிடப்பட்டது. அதிகாலையில் இருந்து கூடிய ரசிகர்கள் கூட்டத்தை திரையரங்கு ஊழியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே லியோ படம் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “லியோ” திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், FDFS காட்சியை காண கோவையில் இருந்து கேரளா சென்ற கர்ப்பிணி ஒருவர், “தான் விஜய்யின் தீவிர ரசிகை, எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் என்று பெயர் வைப்பேன்” என்றார்.