சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமான போலீஸ் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த போலி செய்திகள் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறையின் உதவி எண்கள் ஆன 100 மற்றும் 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.