தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியபுரத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகி நல்லகண்ணு கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்து தகராறில் நல்ல கண்ணுவை ஆதிச்சநல்லுரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் கார் ஏற்றி கொலை செய்துள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய காருடன் சங்கர் கணேஷ் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஆதிச்சநல்லூரை சேர்ந்த நல்லகண்ணு விவசாய வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது பின்புறமாக வந்து கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறில் நல்ல கண்ணுவை கார் ஏற்றி கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.