தமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் ஜாதி மற்றும் மதம் மோதல்களை தூண்டுபவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கு பிரச்சனை ஏற்படாத வகையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும் எனவும் போலீஸார்கள் மரணங்களை தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஜாதி மற்றும் மதம் மோதல்களை தூண்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் உள்ளிட்ட அவற்றின் சட்ட விரோத விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும் தீவிர படுத்த வேண்டும் எனவும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் பெரிய நிகழ்வாக மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.