வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படாதது வியப்பளிப்பதாக கூறிய  விசிக தலைவர் திருமாவளவன் , இச்சம்பவம் தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் கரும்புள்ளியாக பதிவாகிவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.