மாவட்ட ஆட்சியர் தனது காலணியை உதவியாளரை அழைத்து எடுக்கச் சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கூத்தாண்டவர் கோவிலுக்கு  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் ஜதாவத் சென்றுள்ளார். அப்போது கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலனியை கழட்டி உதவியாளரை எடுத்துச்செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் உதவியாளர் ஆட்சியரின் காலணியை தன்னுடைய கையில் எடுத்து கொண்டு சென்றுள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியானதால் கண்டனம் எழுந்து வருகிறது.