நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி 15 வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த சமுதாயக்கூடம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதே இடத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம்  தோன்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்து கிராம மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்தனர்.

அதன் பின் அவர்கள் சமுதாய கூடம் பராமரிப்பு பணிக்கான பேரூராட்சி இயக்கம் மற்றும் பராமரிப்பு பணி இடைவெளி நிரப்பும் நிதி 2021 – 2022 என கீழ் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் சமுதாயக்கூடத்தில் பராமரிப்பு பணி செய்யாமல் முழுவதும் இடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இருந்த அளவைவிட தற்போது குறைவான அளவில் சமுதாயக்கூடம் கட்டப்படுவதாகவும், சமுதாயக்கூடத்தை அனுமதி இல்லாமல் இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் போராட்டத்தை  கைவிட்டு அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது