சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் அனுமதி பெறாத பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் பக்தர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.