பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காதலித்து வந்தனர். இதை இளம்பெண்ணின் குடும்பத்தினர் விரும்பவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று  மாலை காதலியான அந்த இளம்பெண் தனது காதலனுக்கு போன் செய்துள்ளார். அப்போது தன் அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக  கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்ற இளைஞரை அவரது குடும்பத்தினர் அடித்து உதைத்தனர். பின்னர் அவரது அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.