தமிழக அரசின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் புதுச்சேரியில் எப்போது தொடங்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் புதுச்சேரி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்  உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது  குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதனால் இன்னும் ஒரு வாரத்திற்குள் மடிக்கணினி வழங்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.