இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் அவர்களின் வசதிக்காக அடிக்கடி பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்திய ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏதேனும் சில காரணங்களால் ஒருவருக்கு புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டி வரும். அதுபோன்ற சமயத்தில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருடன் அந்த டிக்கெட்டை பகிர்ந்து கொள்ள முடியும்.

ஆனால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை உங்களது குடும்ப உறுப்பினருக்கு மட்டுமே நீங்கள் மாற்றம் செய்யலாம். இந்த வசதியை முன் பதிவு டிக்கெட் வைத்துள்ள எந்த ஒரு பயணியும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் அரசு ஊழியர்கள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை இந்த வசதியை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.