சபரிமலை சீசனை முன்னிட்டு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 22 மற்றும் டிசம்பர் 24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், டிசம்பர் 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.