இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 2024 முதல் டோல்கேட்ல வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்க வேண்டாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில், சுங்கச்சாவடிகளில் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமரா மூலம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே சுங்கக் கட்டணம் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதனால் நெரிசல் குறைவதோடு மட்டுமல்லாமல் பயணித்த தூரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.