சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பண்டிகை நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இங்கு ஐயப்பனை தரிசிக்க உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகள் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக பல சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 22ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக நவ. 10ம் தேதி திறக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.