சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய வழிபாடு பிரசாதமான அரவணை ஒரு டின் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரவணை தயாரிப்பதற்கு சர்க்கரை வழங்குவதற்கு டெண்டர் எடுத்த நிறுவனம் கூடுதல் விலை கேட்டு சர்க்கரை வழங்குவதை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து வேறொரு நிறுவனத்துடன் தேவஸ்தானம் போர்டு ஒப்பந்தம் செய்த நிலையில் அந்த சர்க்கரை இன்னும் வந்து சேரவில்லை.

இதனால் அரவணை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் சில நாட்களாக பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருப்பதால் விற்பனை அதிகரித்து இருப்பு தீர்ந்த நிலையில் அரவணை உற்பத்தி செய்து உடனுக்குடன் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் ஒரு பக்தருக்கு ஐந்து டின் அரவணை மட்டுமே வழங்கப்படுகின்றது. அதே சமயம் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூடுதல் அரவணைக்காக மீண்டும் மீண்டும் வரிசையில் நிற்பதால் இங்கும் அதிகமான கூட்ட நெரிசல் காணப்படுகின்றது.