உத்தர் பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்த் – குஷ்பூ தம்பதி. இந்த  தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு மகன் நான்கு மற்றும் மூன்று வயதில் இரண்டு மகள்கள் என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். பழ வியாபாரியான கோவிந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று எப்போதும் போல் இருவர் இடையே தகராறு ஏற்பட்டதில் குஷ்பூ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரை சமாதானப்படுத்துவதற்காக கோவிந்த் பின்னால் சென்று பேசி சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் நின்ற தண்டவாளத்தில் ஒரு ரயில் வேகமாக வந்ததில் இவர்கள் மீது மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.