சென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே, பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெர்வித்த பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி நிரோஷா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பல வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்க காவல்துறை திட்டமிடுவதாகவும், ஆளுங்கட்சிக்கு எதிராக அவர் கருத்து கூறுவதால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 21ம் கைது செய்யப்பட்ட அமர்பிரசாத் ரெட்டி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.