இந்தியாவில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான உடற்பயிற்சி, அதிக பளு கொண்ட வேலைகள் போன்றவற்றை செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ICMR நடத்திய ஆய்வின் முடிவில் இந்த பரிந்துரை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சமீப காலமாக அதிகரிக்கும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.