இந்திய அரசு வங்கி மற்றும் பழமையான தனியார் வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற புதிய திட்டம் விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், கொரோனா காலத்தில் ஊழியர்கள் அதிக நேரம் பணியாற்றியதாலும், வங்கிகள் லாபத்தில் இயங்குவதால் அதிக ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து தீபாவளிக்கு பின் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.