அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதாக சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகாரளித்தது. இதேபோல் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தரப்பிலும் புகாரளிக்கப்பட்டது. எனினும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாம். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு அளித்தார்.

இதையடுத்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது  “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடியையோ கட்சி பெயரையோ குறிப்பாக இரட்டை இலை கூட ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியை சார்ந்த எவரும் ADMK என பயன்படுத்தக்கூடாது. சட்டம் தங்களை என்ன செய்யும் என்ற வகையில் ஒபிஸ் அணியானது செயல்பட்டு வருகிறது. இதனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளோம்” என்று அவர் பேசினார்.