அ.தி.மு.க OPS அணியின் ஆலோசனை கூட்டம் நாமக்கல் தனியார் திருமணம் மண்டபத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்நிலையில் சேலத்தில் மாநாடு நடத்துவது பற்றியும் அதில் பங்கேற்பது குறித்தும் ஓபிஎஸ் அணியின் நகர ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

முன்பாக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தபோது “வரும் மக்களவை தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்றிணையவேண்டும். அப்போது தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாது. இப்போது எடப்பாடி அணியில் உள்ளவர்களும் சிந்திக்க துவங்கிவிட்டனர்” என்று அவர் பேசினார்.