கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் உயிரிழந்த நிலையில், அது பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடையது என விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 60+க்கும் மேற்பட்ட இடங்களிலும், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சோதனையின் முடிவில் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான பல தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.