சென்னையில் நேற்று  காலை முதல் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சி உரிமையாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று விழுப்புரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் போன்ற இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதோடு ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் மொத்தம் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

அதன் பிறகு சில ஹாஸ்பிடாலிட்டி நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் நடத்தும் குழும நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்‌. இந்த சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.