திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வீரகுமாரசாமி என்ற கோயில்ஒன்று  உள்ளது. இந்த கோயிலின் தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருவிழாவை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 9ம் தேதி நடந்த தேர் திருவிழா நடைபெற்றது.

அப்போது இசைக்கச்சேரியை பார்க்கச் சென்ற 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், அதிமுக IT விங் நிர்வாகி மூலனூர் தினேஷ் உட்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.