தேனி அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் மகாராஜன் பிரியங்கா தம்பதிகள். இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் திருமணம் முடிந்த உடனே மகாராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் . ஆனால் பகலிலும் இரவிலும் மனைவிடம் நீண்ட நேரம் பேசுவதை வழக்கமாக வைத்து இருந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக மகாராஜன் பேசும்பொழுதெல்லாம் பிரியங்காவின் செல் போன்  பிசி பிசி என்று வந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்ட பொழுது தன்னுடைய தோழியிடம் பேசிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால் மகாராஜனுக்கு மனைவி பிரியங்கா மீது சந்தேகம் வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த மகாராஜன் பிரியங்காவை சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்த நிலையில் இருவருக்கும் இடையே சண்டை முற்றவே சம்பவத்தன்று கோவமடைந்த மகாராஜன் பிரியங்காவை சரமாரியாக தாக்கி அவருடைய கழுத்தை நெரித்துள்ளார். இதில் பிரியங்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் மகாராஜன் சரணடைந்துள்ளார். சந்தேக புத்தியால் ஒரு குடும்பமே சிதைந்து  போன சம்பவம் தேனி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.