தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படாது. அன்றைய நாளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பின் அத்தகைய தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும். மேலும் மார்ச் 23ஆம் தேதி இந்த விடுமுறையை ஈடு செய்ய பணி நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.